Breaking news : கோவையில் டேங்கர் லாரி வெடித்து கோர விபத்து..

published 1 year ago

Breaking news : கோவையில் டேங்கர் லாரி வெடித்து கோர விபத்து..

 

கோவை: கோவையில் டேங்கர் லாரி வெடித்து விபத்து ஏற்பட்டதில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மலுமிச்சம்பட்டியில் சண்முகம் என்பவருக்கு சொந்தமான டேங்கர் லாரி பட்டறை செயல்பட்டு வருகிறது.

இந்த பட்டறைக்கு வெல்டிங் பணிக்காக வேதிப்பொருட்கள் ஏற்றிச் செல்லக்கூடிய டேங்கர் லாரி ஒன்று வந்தது.

இன்று காலை அந்த டேங்கர் லாரியில் கியாஸ் வெல்டிங் பணி நடைபெற்றது. இதில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஐந்து தொழிலாளர்கள் பணி மேற்கொண்டிருந்தனர்.

அப்போது வெல்டிங் பணியின் போது எதிர்பாராத விதமாக லாரியின் டேங்கர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதில் வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்த வாகில் என்ற உத்திரபிரதேசத்தை சேர்ந்த தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் ரவி என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேங்கர் லாரி வெடித்து சிதறிய சம்பவம் மலுமிச்சம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe