கோவையில் திருட்டு பைக்கில் செயின் பறித்த கும்பல்

published 1 year ago

கோவையில் திருட்டு பைக்கில் செயின் பறித்த கும்பல்

கோவை : கோவைக்கு ரயிலில் வந்து இறங்கி திருட்டு பைக்கில் செயின் பறிப்பில் ஈடுபட்ட கும்பலை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் பாலகிருஷ்ணன்  நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவில் ரயிலில் வந்த கும்பல் மாநகர பகுதியில் 3 பைக்குகளை திருடி உள்ளனர். 

பின்னர் மறுநாள் காலையில் மாநகரின் வெவ்வேறு பகுதிகளில் சில பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் அந்த கும்பலை பிடிக்க மாநகர் பகுதியில் தீவிர வாகன சோதனை செய்யப்பட்டது. 

செயின் பறிப்பில் ஈடுபட்ட அந்த கும்பலை பிடிப்பதற்காக கோவை மாநகர துணை கமிஷனர் சந்தீஷ் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் செயின்பறிப்பு கும்பல் கண்டறியப்பட்டுள்ளது. விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள். வாகன சோதனையின் போது தேடப்பட்டு வந்த சில குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவ்வாறு அவர் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe