கோவையில் ஆட்டோ விற்பதாக கூறி ரூ. 2.35 லட்சம் மோசடி

published 1 year ago

கோவையில் ஆட்டோ விற்பதாக கூறி ரூ. 2.35 லட்சம் மோசடி

கோவை : கோவை குனியமுத்தூர் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் ஹரூன்கான்(65). இவரிடம் கோவைப்புதூரை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் தனது ஆட்டோவை விற்பதாக கூறி ரூ. 1 லட்சம் காசோலையாகவும், ரூ. 1.35 லட்சம் ரொக்கமாகவும் பெற்றார். 

ஆனால் அவர் பணத்தை பெற்று கொண்ட பின் ஹரூன்கானுக்கு ஆட்டோவை விற்காமலும், அதற்கான ஆவணங்களை கொடுக்காமல் காலம் தாழ்த்தினார். இதனால் ஏமாற்றமடைந்த ஹரூன்கான் பலமுறை அவரிடம் ஆட்டோவை கேட்டும் கொடுக்கவில்லை. 

அவர் கொடுத்த பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ரூ. 2.35 லட்சத்தை மோசடி செய்து விட்டார். இது குறித்து ஹரூன்கான் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ விற்பதாக கூறி ரூ.2.35 லட்சம் மோசடி செய்ததாக முத்துக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe