போத்தனூர் சூப்பர் மார்க்கெட்டில் லட்சக்கணக்கில் பொருட்களை திருடிய ஊழியர்

published 1 year ago

போத்தனூர் சூப்பர் மார்க்கெட்டில் லட்சக்கணக்கில் பொருட்களை திருடிய ஊழியர்

கோவை: கோவை போத்தனூரில் சூப்பர் மார்க்கெட்டில் ரூ. 6 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடிய ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

கோவை போத்தனூர் பாரதி நகரில் சூப்பர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு வீட்டுக்கு தேவையான உபயோக பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஏராளமான ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் ஒவ்வொரு 6 மாதத்துக்கு ஒரு முறையும் பொருட்களின் இருப்பை சரிபார்ப்பது வழக்கம். இதேபோல், கடந்த 2 நாட்களுக்கு முன்பு பொருட்களின் இருப்பை சரி பார்த்தனர். அதில், ரூ. 6,06,577 மதிப்பிலான பொருட்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது. இது குறித்து நிர்வாகம் தரப்பில் விசாரணை நடத்தினர்.

அதில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பணிக்கு சேர்ந்த சுந்தராபுரம் குறிச்சி விநாயகர் நகரை சேர்ந்த ஜிதேந்திரா(19) என்பவரின் நடவடிக்கையில் சந்தேகம் எழுந்தது. இது குறித்து நிர்வாகத்தினர் போத்தனூர் போலீசில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில், போலீசார் விசாரித்தனர். ஊழியர் ஜிதேந்திராவை பிடித்து விசாரித்தபோது, அவர் முதலில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். பின்னர் தீவிர விசாரணையில் அவர் பொருட்களை திருடியதை ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து போலீசார் ஜிதேந்திராவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe