கோவையில் காவல்துறை சார்பில் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தற்காப்பு பயிற்சி

published 1 year ago

கோவையில் காவல்துறை சார்பில் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தற்காப்பு பயிற்சி

கோவை: கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு தற்காப்பு பயிற்சிகள் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாநகர காவல்துறையினர் மாநகர பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு தற்காப்பு பயிற்சிகள் வழங்கும் திட்டத்தை துவக்கி உள்ளனர். இத்திட்டம் தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது.

கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில்  இந்த தற்காப்பு பயிற்சிகள் வழங்கும் நிகழ்ச்சியை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் மாநகர ஆயுதப்படை உதவி ஆய்வாளர் சேகர் மேற்பார்வையில்  தற்காப்பு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இதில் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் தற்காப்பு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.  இதில் கோவை மாநகர் பகுதியில் உள்ள பல்வேறு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர். 

இந்த தற்காப்பு பயிற்சிகள் இனிவரும் நாட்களில் தொடர்ந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe