கோவையில் போலீசாரின் மக்கள் குறைதீர்ப்பு முகாமில், 58 மனுக்களுக்கு தீர்வு

published 1 year ago

கோவையில் போலீசாரின் மக்கள் குறைதீர்ப்பு முகாமில், 58 மனுக்களுக்கு தீர்வு

கோவை : போலீசாரின் மக்கள் குறைதீர்ப்பு முகாம், 58 மனுக்களுக்கு சுமூக தீர்வு காணப்பட்டது.

கோவை மாவட்ட எஸ்.பி., பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் ஆயுதப்படை மைதானத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதில் விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுதாரர்கள், எதிர்மனுதாரர்கள் நேரில் வரவழைக்கப்பட்டனர். 

அவர்களின் நிலுவையில் இருந்த குடும்பப் பிரச்னை, பணப்பரிமாற்ற பிரச்னை மற்றும் இடப்பிரச்னை தொடர்பான, 61 மனுக்கள் மீது விசாரணை மற்றும் மறுவிசாரணை மேற்கொண்டதில், 3 மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை, (எப்.ஐ.ஆர்.,) பதிவு செய்யப்பட்டது. 58 மனுக்கள் சுமூகமான முறையில் தீர்வு காணப்பட்டது. இந்த மக்கள் குறைதீர்ப்பு முகாமில் உட்கோட்ட துணை எஸ்.பி.,கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொண்டனர். 

பிற வேலை நாட்களில் அந்தந்த உட்கோட்ட துணை எஸ்.பி., அலுவலகம் மற்றும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று பொதுமக்கள் தங்கள் குறைகளுக்கு தீர்வு காணலாம் என எஸ்.பி., பத்ரிநாராயணன் அறிவுறுத்தி உள்ளார்.

போலீசாரின் குறைதீர்ப்பு முகாமில் கலந்து கொண்ட பொதுமக்கள்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe