கோவையில் ரயில் மோதி முதியவர் பலி

published 1 year ago

கோவையில் ரயில் மோதி முதியவர் பலி

கோவை :வடகோவை–பீளமேடு ரயில்வே தண்டவாளம் ஆவாரம்பாளையம் அருகே, 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரயில் மோதி இறந்து கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து முதியவரின் உடலை சோதனை செய்தனர். அவர் ஆரஞ்சு, சிவப்பு கட்டம் போட்ட சட்டை அணிந்திருந்தார். இதையடுத்து ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து ரயில் மோதி இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe