அமைச்சர் உதயநிதியை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் உள்பட 267 பேர் கைது

published 1 year ago

அமைச்சர் உதயநிதியை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் உள்பட 267 பேர் கைது

கோவை: தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி சனாதன ஒழிப்பு மாநாட்டில் சனாதனத்தை ஒழிப்பேன் என்று பேசினார். அவரது பேச்சை கண்டிக்கும் வகையிலும் உதயநிதியின் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் இந்து முன்னணி சார்பாக தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

கோவை மாநகர மாவட்ட இந்து முன்னணி சார்பாக செஞ்சிலுவை சங்கம் முன்பு  மாவட்டத் தலைவர் கே.தசரதன் தலைமை வகித்தார். இதில், பங்கேற்ற மாநில நிர்வாக குழு உறுப்பினர் சதீஷ், கோவை கோட்ட செயலாளர் பாபா கிருஷ்ணன்,  மாவட்ட பொது செயலாளர் ஜெய்சங்கர் மற்றும் மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார் உட்பட 159 பேர் மீது ரேஸ்கோர்ஸ் போலீசாரும், துடியலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 108 பேர் மீது துடியலூர் போலீசாரும் என மொத்தம் 267 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe