கோவையில் 'ஆட்டோ மோட்டோ' மின்சார வாகனங்கள் கண்காட்சி

published 1 year ago

கோவையில் 'ஆட்டோ மோட்டோ' மின்சார வாகனங்கள் கண்காட்சி

கோவை:மின்சாரம் வாகனங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவையில் எலெக்ட்ரிக் கார்கள் மற்றும் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன கண்காட்சி நடைபெற்றது.

கோவை கொடிசியா வளாகத்தில் ஆட்டோ மோட்டோ என்ற பெயரில் எலெக்ட்ரிக் வாகனங்கள் கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா முழுவதும் உள்ள எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டு 60க்கும் மேற்பட்ட எலெக்ட்ரிக் கார்கள் மற்றும் பைக்குகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.

எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், எலெக்ரிக் வாகனங்கள் பயன்பாட்டை அதிகரித்திடும் நோக்கிலும் நடத்தப்பட்ட இந்த கண்காட்சியில் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு பார்வையிட்டனர்.

இதில் எல்காட் இயக்குநர் அருண்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வால்வோ சி-40 என்ற எலெக்ரிக் காரை அறிமுகம் செய்துவைத்தார். கோவை மாவட்டத்தில் அதிக அளவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி இருப்பதாகவும், கல்லூரி மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் மாணவர்களுக்கு ஸ்டால்கள் அமைத்துக் கொடுத்துள்ளதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe