குடிப்பழக்கம் இருந்ததால் கோவையில் உருட்டுக்கட்டையால் அடித்து கணவனை கொன்ற மனைவி

published 1 year ago

குடிப்பழக்கம் இருந்ததால் கோவையில் உருட்டுக்கட்டையால் அடித்து கணவனை கொன்ற மனைவி

கோவை:கோவையில் உருட்டு கட்டையால் தாக்கி கணவரை கொலை செய்த மனைவியால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை சுங்கம் தியாகி சிவராம் நகரை சேர்ந்தவர் லோகநாதன்(75). இவரது மனைவி தெய்வானை(70). லோகநாதன் குடிப்பழக்கம் உடையவர். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதேபோல், நேற்று இரவு அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு கடுமையான வாக்குவாதம் எழுந்தது. இதில் ஆத்திரமடைந்த தெய்வானை கீழே கிடந்த உருட்டுக்கட்டைடய எடுத்து லோகநாதனை தாக்கினார். இதில், அவர் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். பின்னர் அவர்கள் அளித்த தகலின் பேரில் சம்வயிடம் வந்த ராமநாதபுரம் போலீசார் லோகநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கணவரை கட்டையால் தாக்கி மனைவியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe