தனியார் நிறுவனத்தில் 7 லட்சம் மோசடி செய்த ஊழியர்- போலீசார் விசாரணை...

published 1 year ago

தனியார் நிறுவனத்தில் 7 லட்சம் மோசடி செய்த ஊழியர்- போலீசார் விசாரணை...

கோவை: தனியார் நிறுவனத்தில் 7 லட்சம் மோசடி செய்த ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை தொட்டிபாளையம் பிரிவு லட்சுமி நகரை சேர்ந்தவர் லோகேஷ்வரன்(35). இவர் அங்கு ஜிஎம் என்டர்பிரைசஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் சேலம் மணியனூரை சேர்ந்த ஜனார்த்தனன்(32) என்பவர் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில், வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்யும் தொகைகளை ஜனார்த்தனன் நிறுவன வங்கி கணக்கில் வரவு வைக்காமல் அவரது கணக்கில் வரவு வைத்துள்ளார். அந்த வகையில் சில மாதங்களாக அவர் ரூ. 20 லட்சம் மோசடி செய்துள்ளார். நிறுவன செலவு, வரவு கணக்குகளை லோகேஷ்வரன் ஆய்வு செய்த போது ஜனார்த்தனன் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து அவர் தான் மோசடி செய்த பணத்தை திருப்பி கொடுத்துவிடுவதாக உறுதியளித்தார். அதன் பின்னர் அவர் சிறிது, சிறிதாக ரூ.13 லட்சத்தை லோகேஷ்வரனின் வங்கி கணக்கில் செலுத்தியதாக தெரிகிறது. தொடர்ந்து மீதமுள்ள பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். 

இதனால் ஏமாற்றமடைந்த லோகேஷ்வரன் செல்போனில் ஜனார்த்தனனை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அவர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். இது குறித்து லோகேஷ்வரன் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் ரூ.7 லட்சம் மோசடி செய்ததாக தனியார் நிறுவன ஊழியர் ஜனார்த்தனன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe