விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவில் போன்றே அலங்கார பந்தலை வடிவமைத்த இந்து மக்கள் கட்சியினர்...

published 1 year ago

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவில் போன்றே அலங்கார பந்தலை வடிவமைத்த இந்து மக்கள் கட்சியினர்...

கோவை: கோவில் நுழைவாயில் போன்று அலங்கார பந்தல் அமைத்து பிரம்மாண்டமாக விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வரும் இந்து மக்கள் கட்சியினர்.

 

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் ஊர் பொதுமக்கள் சார்பில் ஆங்காங்கே விநாயகர் சிலைகள் வைத்து விநாயகர் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. கோவையிலும் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைத்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை தேர் நிலை திடல் பகுதியில் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இங்கு கோவில் நுழைவாயில் போன்று அலங்கார பந்தல் முகப்பு அமைக்கப்பட்டு, ராஜ கணபதி அலங்காரத்தில் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. மேலும் விநாயகர் சிலைக்கு இரு புறங்களிலும் யானை முகம் கொண்ட தூண்கள் போல் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

 

வழக்கமாக தகரத்தினால் ஆன பந்தல்கள் அமைக்கப்பட்டு விநாயகர் சிலைகளை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்து மக்கள் கட்சியினர் கோவில் போன்றே நுழைவாயிலை அமைத்து அதற்குள் விநாயகர் சிலையை வைத்து இரு புறங்களிலும் யானை முகங்கள் கொண்ட தூண்களை அமைத்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருவது அவ்வழியாக செல்லும் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe