முதல் திருமணத்தை மறைத்து 2வது திருமணம்.. 4 பேர் மீது வழக்கு

published 1 year ago

முதல் திருமணத்தை மறைத்து 2வது திருமணம்.. 4 பேர் மீது வழக்கு

கோவை: கோவையில் முதல் திருமணத்தை மறைத்து 2 வது திருமணம் செய்த வாலிபர் குறித்து இளம்பெண் போலீசில் புகார் அளித்தார். போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை பவிளம் தெருவை சேர்ந்தவர் அமிர்தபஷினி (27). இவர் கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:

எனக்கும் கோவையை சேர்ந்த அமல்ராஜ் (30) என்பவருக்கும், திருமணம் நடந்தது. திருமணத்தின்போது எனது பெற்றோர் 40 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் வரதட்சணையாக கொடுத்தனர். பின்னர் நாங்கள் மதுரையில் வசித்தோம். அப்போது அமல்ராஜ் என்னை அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்தார். இதற்கிடையே நான் கர்ப்பமானேன்.

கணவரை பிரிந்து கோவையில் உள்ள எனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டேன். அதன்பின்பு எனக்கு குழந்தை பிறந்தது. இந்நிலையில், ஒரு பெண் என்னை தொடர்பு கொண்டு தான் அமல்ராஜின் முதல் மனைவி என்றும், அவர் மூலம் எனக்கு 2 குழந்தைகள் உள்ளது எனவும் தெரிவிக்கிறார்.

நான் விசாரித்தபோது, இதற்கு அமல்ராஜின் தந்தை முருகன், தாய் கலா, சகோதரி அனு அப்சரா ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். அவர்கள் முதல் திருமணத்தை மறைத்து அமல்ராஜை தனக்கு 2வது திருமணம் செய்து வைத்துள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என அந்த புகாரில் அவர் தெரிவித்திருந்தார். புகாரின் பேரில், போலீசார் அமல்ராஜ், முருகன், கலா, அனு அப்சரா ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe