கோவையில் வெவ்வேறு இடங்களில் 3 பைக்குகள் திருட்டு

published 1 year ago

கோவையில் வெவ்வேறு இடங்களில் 3 பைக்குகள் திருட்டு

கோவை: கோவையில் வெவ்வேறு இடங்களில் 3 டூ-வீலர்கள் திருடு போனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாநகரில் வீடு மற்றும் கடை முன்பு நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருடு போகிறது. இதனை தடுக்கும் விதமாக போலீசார் வாகன சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் கவுதம்(21). இவர் சம்பவத்தன்று தனது இருசக்கர வாகனத்தை ரத்தினபுரி ஊட்டி ஹவுஸ் அருகே நிறுத்தியிருந்தார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது இருசக்கர வாகனத்தை காணவில்லை.

மர்ம நபர் திருடி சென்று விட்டார். இது குறித்த புகாரின் பேரில், ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிந்து திருட்டில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.

கோவை பேரூர் செட்டிபாளையம் போஸ்டல் காலனியை சேர்ந்தவர் கார்த்திகேயன்(31). புகைப்பட கலைஞர். இவர் சம்பவத்தன்று தனது இருசக்கர வாகனத்தை உப்பிலிபாளையம் சர்ச் அருகே நிறுத்தியிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் திருடி சென்று விட்டார். புகாரின் பேரில், வழக்குப்பதிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.

இதேபோல், கோவை சவுரிபாளையம் ரோடு கருணாநிதி நகரை சேர்ந்தவர் கவுரிசங்கர்(26). இவர் சம்பவத்தன்று இரவு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தார். அதனை மர்ம நபர் திருடி சென்றுவிட்டார். மறுநாள் இருசக்கர வாகனம் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்த கவுரிசங்கர் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe