கோவையில் 68 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 14 வயது சிறுவன் கைது…

published 1 year ago

கோவையில் 68 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 14 வயது சிறுவன் கைது…

கோவை: கோவையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

கோவையை சேர்ந்தவர் 68 வயது மூதாட்டி. இவரது உறவினர்கள் சம்பவத்தன்று மூணாறு சென்றனர். மூதாட்டி மட்டும் தனியாக இருந்தார்.

அப்போது வீட்டுக்குள் சிறுவன் ஒருவன் அத்துமீறி நுழைந்தான். திடீரென சிறுவன் மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றான்.

இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி கூச்சல் போட்டார். இதனால் பயந்து போன சிறுவன் அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான்.
இது குறித்து வெரைட்டிஹால் ரோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில், வீட்டில் தனியாக இருந்த மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது கோவை பொன்னைய ராஜபுரத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. போலீசார் சிறுவனை கைது செய்து சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து மூதாட்டிக்கு சிறுவன் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe