கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!

published 1 year ago

கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!

கோவை: நாளை (5.10.2023) கோவையில் உள்ள நான்கு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட இடங்களில் மின்விநியோகம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தடைபடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி மின் தடை ஏற்படும் இடங்கள்:

செங்கத்துறை துணை மின் நிலையம்: 
செங்கத்துறை, காடம்பாடி, ஏரோ நகர், காங்கேயம்பாளையம், பி.என்.பி.நகர் மற்றும் மதியழகன் நகர்.

மதுக்கரை துணை மின் நிலையம்: 
க.க.சாவடி, பாலத்துறை, பை-பாஸ் ரோடு, சாவடி புதுார், காளியாபுரம், எட்டிமடை, எம்.ஜி.ஆர்., நகர், சுகுணாபுரம், பி.கே.புதுார், மதுக்கரை, அறிவொளி நகர் மற்றும் கோவைபுதுார் ஒருபகுதி.

சரவணம்பட்டி துணை மின் நிலையம்: 
சரவணம்பட்டி, அம்மன் கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணர், உருமாண்டம்பாளையம், கவுண்டர் மில், சுப்ரமணியம்பாளையம், மணியகாரம்பாளையம் ஒருபகுதி, லட்சுமி நகர், நாச்சிமுத்து நகர், ஜெயப்பிரகாஷ் நகர், கணபதி புதுார், உடையாம்பாளையம் மற்றும் வெள்ளக்கிணர் ஹவுசிங் யூனிட்.


சீரநாயக்கன்பாளையம் துணை மின் நிலையம்: சீரநாயக்கன்பாளையம், பாப்பநாயக்கன்புதுார், வடவள்ளி, வேடபட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபா காலனி, சுண்டப்பாளையம் ஒருபகுதி, செல்வபுரம், அண்ணா நகர் ஹவுசிங் யூனிட், காந்தி நகர், லட்சுமி நகர் மற்றும் இடையர்பாளையம் - வடவள்ளி ரோடு ஒருபகுதி.

சோமையம்பாளையம் துணை மின் நிலையம்: யமுனா நகர், காளப்பநாயக்கன்பாளையம், ஜி.சி.டி.நகர், லுானா நகர், கணுவாய், தடாகம் ரோடு, சோமையம்பாளையம், அகர்வால் பள்ளி ரோடு, சேரன் இண்டஸ்ட்ரியல் பகுதி, கே.என்.ஜி. புதுார், வித்யா காலனி, சாஜ் கார்டன், ஆசிரியர் காலனி, வி.எம்.டி.நகர், நமீதா கார்டன், அப்துல்கலாம் காலனி மற்றும் மேகலாமணி ரோடு.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe