கோவையில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்தான விழிப்புணர்வு பேரணி- மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு…

published 1 year ago

கோவையில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்தான விழிப்புணர்வு பேரணி- மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு…

கோவை: தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்தான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு வாரம் அக்டோபர் 5ம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் இது குறித்து அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவை வடக்கு வட்டம் சார்பில் அரசு கலைக் கல்லூரியில் கல்லூரி மாணவர்கள் மூலம் தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்தான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறும் விழிப்புணர்வு முழக்கங்களுடனும் பேரணி மேற்கொண்டனர். அரசு கலைக் கல்லூரியில் துவங்கிய இந்த பேரணி பந்தய சாலையை முழுவதும் சுற்றி மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது.

இந்நிகழ்வில் வடக்கு வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன், அரசு கலைக் கல்லூரி முதல்வர் உலகி உட்பட பலர் கலந்து கொண்டனர். பேரணியை அடுத்து இது குறித்தான கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe