கோவையில் சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு செக்ஸ் டார்ச்சர்...

published 1 year ago

கோவையில் சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு செக்ஸ் டார்ச்சர்...

கோவை: கோவை தனியார் நிறுவனத்தில் சம்பளம் கேட்ட பெண்ணுக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்ததாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பொள்ளாச்சியை சேர்ந்தவர் 40 வயது பெண். இவர் பீளமேட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் அதிகாரியாக ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார். கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் முதல் 2022 செப்டம்பர் மாதம் வரை வேலை பார்த்தார்.

ஆனால் நிறுவனத்தினர் 4 மாதமாக சம்பளம் கொடுக்காமல் காலம் தாழ்த்தினர். இதனால் அவர் வேலையை விட்டு நின்று விட்டார். அதன்பிறகு அந்த பெண் நிறுவனத்தினரை தொடர்பு கொண்டு தனக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கியை தருமாறு கேட்டுள்ளார். அப்போது நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் 2 பேர் அந்த பெண்ணை தங்களது பாலியல் இச்சைக்கு உடன்படுமாறு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நிர்வாக இயக்குனர்கள் தகாத வார்த்தைகளால் பேசி அந்த பெண்ணை மிரட்டியதாக தெரிகிறது. இது குறித்து அந்த பெண் பீளமேடு போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், போலீசார் தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe