பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் ரேஸ் தேதி அறிவிப்பு...

published 1 year ago

பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் ரேஸ் தேதி அறிவிப்பு...

கோவை: பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் வருகின்ற 14ஆம் தேதி கோவையில் மிதிவண்டி போட்டிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, வருகின்ற 14ஆம் தேதி காலை 8 மணிக்கு அண்ணா மிதிவண்டி போட்டிகள் கோவை புதூர் மின்வாரிய அலுவலகம் முன்பு துவங்கி ஆர்டிஓ அலுவலகம், CBM கல்லூரி வழியாகச் சென்று மீண்டும் மின்வாரிய அலுவலகம் வந்தடையும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும். இப்போட்டிகள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கோவை மாவட்ட பிரிவு மூலம் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 13 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 15 கிலோமீட்டர் மாணவியர்களுக்கு 10 கிலோமீட்டர், 15 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோமீட்டர் மாணவியர்களுக்கு 15 கிலோமீட்டர், 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோமீட்டர் மாணவியர்களுக்கு 15 கிலோமீட்டர் என நடத்தப்பட உள்ளதாகவும், போட்டியில் பங்கேற்கும் மாணவ மாணவிகள் பள்ளியின் தலைமை ஆசிரியர் கையொப்பமிட்ட வயது சான்றிதழ் ஆதார் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல்களை 13ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போட்டிகளில் பங்கேற்க இந்தியாவில் தயாரான சாதாரண மிதிவண்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறும் மாணவ மாணவியர்களுக்கு முதல் பரிசாக 5,000 இரண்டாம் பரிசாக 3000, மூன்றாம் பரிசாக 2000, 4 முதல் 10 இடங்களில் வருபவர்களுக்கு 250 ரூபாய் மதிப்பிலான பரிசுகளும்,  தகுதி சான்றிதழ்களும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe