கோவை நகரில் அம்பேத்கர் சிலையை அமைக்க கோரி தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் மனு…

published 1 year ago

கோவை நகரில் அம்பேத்கர் சிலையை அமைக்க கோரி தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் மனு…

கோவை: கோவை நகரில் அம்பேத்கர் சிலையை அமைக்க கோரி தமிழ் புலிகள் கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதுகுறித்து அவர்கள் அளித்த மனுவில் அம்பேத்கர் சிலை அனைத்து மாவட்டங்களிலும் அரசே அமைத்துக் கொடுத்துள்ள நிலையில் கோவை மாவட்டத்தில் எங்குமே அம்பேத்கர் சிலை அமைக்கப்படவில்லை எனவும் அவரது சிலையை அமைப்பதனால் புதிய தலைமுறை இந்தியாவின் வரலாற்றை எளிதில் அறிய முடியும் எனவும் எனவே அம்பேத்கரின் சிலையை கோவை நகரின் மையப் பகுதியில் அரசாங்கமே அமைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மனு தமிழ் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இளவேனில் தலைமையில் அளிக்கப்பட்டது. மனு அளிக்க வந்த தமிழ் புலிகள் கட்சியினர் அம்பேத்கர் புகைப்படத்தை கையில் ஏந்தியவாறு அவர்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe