கத்தியை காட்டி பணம் பறித்த நபர் கைது...

published 1 year ago

கத்தியை காட்டி பணம் பறித்த நபர் கைது...

கோவை: கோவை சுண்டாக்காமுத்தூர் ரோட்டை சேர்ந்தவர் மணிகண்டன்(40). சுமை தூக்கும் தொழிலாளி. இவர் நேற்று செல்வபுரம் அசோக் நகர் ரவுண்டானா அருகே தனது நண்பர் ஒருவருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த வாலிபர் ஒருவர் மது குடிக்க பணம் தருமாறு மணிகண்டனிடம் கேட்டார். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி மணிகண்டனிடம் இருந்த ரூ. 800ஐ பறித்து கொண்டு தப்பினார். 

இது குறித்து மணிகண்டன் செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தது தொழிலாளி சரவணன் (எ) குண்டு சரவணன்(34) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe