நேரம் கேட்பது போல் நடித்து முதியவரிடம் செயின் பறிப்பு…

published 1 year ago

நேரம் கேட்பது போல் நடித்து முதியவரிடம் செயின் பறிப்பு…

கோவை: ஊட்டி காந்திநகரை சேர்ந்தவர் பிச்சை(70). இவர் வெரைட்டி ஹால் ரோடு பகுதியில் வசிக்கும் தனது மகளை பார்க்க வந்தார். பின்னர் சம்பவத்தன்று அவர் மார்க்கெட் செல்வதற்காக வெரைட்டிஹால் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். 

அப்போது பின்னால் நடந்து வந்த 2 பேர் திடீரென பிச்சையின் தோளில் கை போட்டு மணி என்னாச்சு? என கேட்டுள்ளனர். அப்போது அதில் ஒருவன் நைசாக முதியவர் கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த முதியவர் இது குறித்து வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe