விபச்சாரம் நடத்திய 4 பெண் புரோக்கர்கள் கைது...

published 1 year ago

விபச்சாரம் நடத்திய 4 பெண் புரோக்கர்கள் கைது...

கோவை: பீளமேட்டில் மசாஜ் சென்டரில் விபசாரம் நடத்திய 4 பெண் புரோக்கர்களை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான உரிமையாளர் மற்றும் மேலாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை பீளமேடு நவ இந்தியா எஸ்டிவி நகர் 2வது தெருவில் மசாஜ் சென்டர் உள்ளது. இங்கு இளம்பெண்களை வைத்து விபசாரம் நடைபெறுவதாக பீளமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்று அந்த மசாஜ் சென்டருக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது. 

இதனையடுத்து போலீசார் விபசாரம் நடத்திய 4 பெண் புரோக்கர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மசாஜ் சென்டர் உரிமையாளர் ராஜ்குமார், மேலாளர் கவுதம் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe