போக்சோ வழக்கில் தொடர்புடையவர் தீர்ப்புக்கு பயந்து விஷம் குடித்து தற்கொலை...

published 1 year ago

போக்சோ வழக்கில் தொடர்புடையவர் தீர்ப்புக்கு பயந்து விஷம் குடித்து தற்கொலை...

கோவை: கோவையில் போக்சோ வழக்கில் தொடர்புடையவர் தீர்ப்புக்கு பயந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கோவை போத்தனூர் ஸ்ரீராம் நகர் 7-வது தெருவை சேர்ந்தவர் ராஜூ(43). பிளம்பர். இவர் கடந்த 2019ம் ஆண்டு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். சிறைக்கு சென்ற அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ராஜூவுக்கு விரைவில் தீர்ப்பு வழங்கப்பட இருந்தது.

இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த நிலையில் காணப்பட்ட ராஜூ நேற்று காலை வீட்டில் விஷம் குடித்து மயங்கினார். குடும்பத்தினர் அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe