கோவையில் அடுத்தடுத்த வீடுகளில் நகை, பணம், வெள்ளி பொருட்கள் கொள்ளை- போலிசார் தீவிர விசாரணை...

published 1 year ago

கோவையில் அடுத்தடுத்த வீடுகளில் நகை, பணம், வெள்ளி பொருட்கள் கொள்ளை- போலிசார் தீவிர விசாரணை...

கோவை: கோவை சிங்காநல்லூரில் அடுத்தடுத்த வீடுகளில் நகை, பணம், வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை நீலிகோணாம்பாளையம் தாமோதரசாமி லே-அவுட்டை சேர்ந்தவர் ராமநாதன் (58). இவர் கடந்த 25ம் தேதி வீட்டை பூட்டி விட்டு வெளியூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து நேற்று காலை வீட்டுக்கு திரும்பினார். அப்போது, கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. பீரோவில் வைத்திருந்த 3 பவுன் நகை, வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரூ.32 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது. 

இது குறித்து ராமநாதன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
இதேபோல், அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (31) நேற்று முன்தினம் இரவு தன் வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். பின்னர் நேற்று காலை வீட்டுக்கு வந்து போது கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. பீரோவில் இருந்த 3 பவுன் நகை, வெள்ளி, ரூ.50 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து கோவிந்தராஜ் அளித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

சிங்காநல்லூரில் ஒரே பகுதியில் அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe