கோவையில் விபச்சார புரோக்கர்கள் கைது...

published 1 year ago

கோவையில் விபச்சார புரோக்கர்கள் கைது...

கோவை: கோவையில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய விபசார புரோக்கர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.


கோவையில் ஓட்டல்கள், மசாஜ் சென்டர்கள் மற்றும் வீடுகளில் சிலர் விபசாரம் நடத்துவதாக போலீசாருக்கு அடிக்கடி புகார்கள் வருகின்றனர். அதன்பேரில், போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்கின்றனர். இந்நிலையில், லட்சுமி மில் ஜங்ஷனில் உள்ள ஒரு கட்டிடத்தின் 2வது மாடியில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி ரேஸ்கோர்ஸ் போலீசார் நேற்று அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் விபசார புரோக்கர்கள் ராமநாதபுரம் சித்தர்கோட்டை பிரபு(30), தஞ்சாவூர் பரணீதரன்(27) ஆகியோரை கைது கைது செய்தனர். மேலும் தலைமறைவான கார்த்தி என்பவரை தேடி வருகின்றனர். கைதான இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதேபோல், கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இளம்பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அதில், அங்கு வீடு வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் விபசாரம் நடத்திய புரோக்கர்கள் உடுமலை விவேக்(25), சூலூர் முத்துகவுண்டன்புதூர் ஈஸ்வரன்(29) ஆகிய இருவரை கைது செய்து அங்கிருந்த இளம்பெண்ணை மீட்டனர். மேலும் தலைமறைவான பெண் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe