கோவை மாநகராட்சியில் 4 நியாயவிலை கடைகள் திறப்பு...

published 1 year ago

கோவை மாநகராட்சியில் 4 நியாயவிலை கடைகள் திறப்பு...

கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து தலா ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நான்கு நியாயவிலைக் கடைகளை கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர்.

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 52-க்குட்பட்ட பீளமேடு ஹட்கோ காலனி, வார்டு எண்.54க்குட்பட்ட வரதராஜபுரம், சக்தி நகர், வார்டு எண்.53-க்குப்பட்ட மசக்காளிபாளையம், விஸ்வநாதன் லே-அவுட் பகுதி, வார்டு எண்.24-க்குட்பட்ட அவினாசி சாலை, கோப் கல்லூரி, சாஸ்திரி வீதி ஆகிய நான்கு பகுதிகளில் கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து தலா 20 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நான்கு நியாயவிலைக் கடைகள் திறந்து வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe