திருமண ஏற்பாடு செய்து வந்த நிலையில், இளம்பெண் தற்கொலை...

published 1 year ago

திருமண ஏற்பாடு செய்து வந்த நிலையில், இளம்பெண் தற்கொலை...

கோவை,: கோவையில் திருமண ஏற்பாடு செய்து வந்த நிலையில், இளம்பெண் ஒருவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோவை சுந்தராபுரம் மாச்சம்பாளையத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி மகள் சரண்யா (26), தனியார் நிறுவன ஊழியர். இவரது பெற்றோர் சரண்யாவுக்கு மாப்பிள்ளை பார்த்து திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர். இந்நிலையில், நேற்று சரண்யாவின் பெற்றோர் பல்லடத்தில் உள்ள கோயிலுக்கு சென்றனர். அங்கிருந்து அவர்கள் செல்போனில் தனது மகளை அழைத்தனர். ஆனால், அவர் அழைப்பை ஏற்கவில்லை. 

இதனால், சந்தேகமடைந்த பெற்றோர் வீட்டு அருகில் உள்ள ஒருவருக்கு போன் செய்து, தனது மகளை வீட்டில் சென்று பார்த்து வருமாறு தெரிவித்துள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, சரண்யா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே சரண்யாவின் பெற்றோருக்கும், போலீசாருக்கும் தகவல் அளித்தார். கோவை திரும்பிய அவரது பெற்றோர் மகளின் சடலத்தை கண்டு கதறி அழுதனர். 

சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சரண்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பினர். அவர் திருமணத்தில் உடன்பாடு இல்லாததால் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என சுந்தராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe