என்கவுண்டருக்கு பயந்து பிரபல ரவுடி கோவை நீதிமன்றத்தில் சரண்…

published 1 year ago

என்கவுண்டருக்கு பயந்து பிரபல ரவுடி கோவை நீதிமன்றத்தில் சரண்…

கோவை: கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவர் மீது சரவணம்பட்டி உள்பட பல்வேறு   போலீஸ் நிலையங்களில்
கொலை, கஞ்சா கடத்தல் உள்பட 15 வழக்குகள் உள்ளன.

இந்தநிலையில் வழக்கு தொடர்பாக போலீசார் சண்முகத்தை தேடி வந்தனர். அப்போது  அவர் தலைமறைவாக இருந்தார்.

இதனையடுத்து அவரது குடும்ப உறுப்பினர்களை கைது செய்து விடுவதாகவும், சண்முகத்தை என்கவுன்டர் செய்து விடுவதாகவும் போலீசார் மிரட்டியதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து இன்று ரவுடி சண்முகம் தனது வக்கீல்களுடன் கோவை  கோர்ட்டில் சரண் அடைந்தார். கோர்ட்டுக்கு செல்லும்  முன்னதாக   சண்முகம், நிருபர்களிடம் கூறியதாவது
போலீசார் சுட்டு விடுவேன் என மிரட்டுகின்றனர்.

குடும்பத்தினர் மீது கஞ்சா விற்பதாக  பொய் வழக்கு போட்டு விடுவதாக மிரட்டி வருகிறார்கள். குடும்பத்தினருக்காக கோர்ட்டில்  சரண் அடைந்து உள்ளேன் . 15 வழக்குகள் இருப்பதால் 
போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

எனவே தானாக முன் வந்து சரண் அடைந்துள்ளேன்  ஜெயிலில்  இருந்து வெளியில் வந்து  2 மாதங்கள்தான் ஆகின்றது.
திருந்தி வாழ்ந்து வரும் என்னை  போலீசார் தொடர்ந்து தேடி வருவதால் வக்கீல்களுடன்  கோர்ட்டில் சரண் அடைகிறேன்.  

எனது சகோதரர் மீதும் 5 வழக்குகள் உள்ளன.சமீபத்தில் அவரை பிடித்த போலீசார் கை,கால்களை உடைத்து விட்டனர். எனக்கு எதுவும் ஆகாமல் இருக்கவே மக்கள் முன்னிலையில்  கோர்ட்டில் சரண் அடைகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe