கல்லறை திருநாளில் முன்னோர்களை வணங்கிய கோவை மக்கள்…

published 1 year ago

கல்லறை திருநாளில் முன்னோர்களை வணங்கிய கோவை மக்கள்…

கோவை: கோவையில் கல்லறை திருநாளையொட்டி கோவை திருச்சி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ.கல்லறை தோட்டத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் நவம்பர் 2ம் தேதி கல்லறை திருநாள் கடைபிடிக்‍கப்பட்டு வருகின்றது.

கல்லறை திருநாளை முன்னிட்டு கிறிஸ்தவ மக்‍கள் தங்களது முன்னோர்களை நினைவு கூறும் வகையில் கல்லறையை சீரமைத்து அலங்கரிக்‍கும் பணியில் ஈடுபட்டு சிறப்பு பிரார்த்தனைகள் செய்வது வழக்கம்.

இந்நிலையில் கோவை திருச்சி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ.கல்லறை தோட்டத்தில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது.

இதில் கிறிஸ்தவ மக்கள் தங்களது  முன்னோர்களின் கல்லறையை சீரமைத்து வர்ணம் பூசி கல்லறைகளை அலங்கரித்து  மலர் தூவி, மெழுகுவர்த்தி பற்ற வைத்து பலர் தங்களது குடும்பத்தினருடன்  கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

மேலும் மாலையில் நடைபெற்ற ஜெப கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe