வடவள்ளியில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகனை தாக்கிய தாய்..!

published 2 years ago

வடவள்ளியில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகனை தாக்கிய தாய்..!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/BAXr3lCHLQq5ShW9FLGZmG

கோவை, ஜூன்.21-

கோவை வடவள்ளி அடுத்த கணுவாயை சேர்ந்த  19 வயது வாலிபர் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது தாயார் குடும்ப தகராறு காரணமாக கடந்த 1 வருடத்திற்கு முன்பு தனது கணவரைப் பிரிந்து சென்றார். 

பின்னர் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் கல்லூரி மாணவரின் தாயாருக்கும் அவரது உறவினருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாகத் தெரிகிறது. இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த கல்லூரி மாணவர், தனது தந்தையை அழைத்துக் கொண்டு தாய் வீட்டுக்குச் சென்றார். 

அங்கு  அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த கல்லூரி மாணவரின் தாயார், பாட்டி மற்றும் கள்ளக்காதலன் ஆகியோர் சேர்ந்து கல்லூரி மாணவரைத் தகாத வார்த்தைகளால் திட்டி, அங்கிருந்த இரும்பு கம்பியால் சரமாரியாகத் தாக்கினர்.

பின்னர் கொலை மிரட்டல் விடுத்தனர். பலத்த காயமடைந்த கல்லூரி மாணவர் வலியால் சத்தம்போட்டார். அவரின் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். 

அவரை மீட்டு வடவள்ளியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்குச் சேர்ந்தனர். இதுகுறித்து கல்லூரி மாணவர்  வடவள்ளி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவரின் தாயார், கள்ளக்காதலன், மற்றும் பாட்டி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe