கோவையில் நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த மேலும் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு...

published 1 year ago

கோவையில் நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த மேலும் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு...

கோவை: தீபாவளி பண்டிகை கடந்த 12ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடைகள் அணிந்து, ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறி பட்டாசு வெடித்து கொண்டாடினர். 

இந்நிலையில், காற்று மாசு அதிகரிப்பதை தடுக்க அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது. அதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடிக்கின்றனரா? என போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக கோவையில் 66 பேர் மீது போலீசார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில், சுந்தராபுரம், பீளமேடு பகுதிகளில் நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக மேலும் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுவரை மொத்தம் 73 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe