மதுபோதையில் தூங்கிய வாலிபரிடம் தங்க மோதிரம், பணத்தை திருடிய நண்பர்...

published 1 year ago

மதுபோதையில் தூங்கிய வாலிபரிடம் தங்க மோதிரம், பணத்தை திருடிய  நண்பர்...

கோவை: கோவையில் டாஸ்மாக் கடை அருகே மதுபோதையில் தூங்கிய வாலிபரிடம் தங்க மோதிரம், பணம் திருடிய அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.

கோவை தெற்கு உக்கடம் சிஎம்சி காலனியை சேர்ந்தவர் வினோத் (27). குடிப்பழக்கம் உடைய இவர் தனது நண்பர் ஒருவருடன் நேற்று முன்தினம் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றார். பின்னர் போதை அதிகமானதால், வினோத் கடை அருகேயே படுத்து உறங்கினார். சிறிது நேரம் கழித்து எழுந்து பார்த்த போது, அவரது கையில் போட்டிருந்த அரை பவுன் தங்க மோதிரம் மற்றும் பாக்கெட்டில் இருந்த ரூ.6 ஆயிரம் பணத்தை காணவில்லை. அவருடன் வந்த அவரது நண்பர் வெரைட்டிஹால் ரோடு சிஎம்சி காலனி 13வது பிளாக்கை சேர்ந்த மனோஜ் (35) என்பவரும் மாயமாகி இருந்தார். 

இதுகுறித்து வினோத் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் சம்பவ பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இதில், மோதிரம் மற்றும் பணத்தை திருடியது வினோத்தின் நண்பர் மனோஜ் என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe