குளியலறையில் வழுக்கி விழுந்து பெண் உயிரிழப்பு...

published 1 year ago

குளியலறையில் வழுக்கி விழுந்து பெண் உயிரிழப்பு...

கோவை: கோவை குனியமுத்தூர் இடையர்பாளையத்தை சேர்ந்தவர் பாலு மகேந்திரன். இவரது மனைவி ஜோதிமணி(40). இவரது மகள் பிரவீனா(17) கல்லூரி சென்று விட்டார். நேற்று வீட்டில் ஜோதிமணி மட்டும் தனியாக இருந்தார். இந்நிலையில், கல்லூரி சென்ற பிரவீனா மாலையில் வீடு திரும்பினார். 

அப்போது வீடு உட்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. வெளிப்பக்கமாக இருந்த பாத்ரூமில் ஜோதிமணி கீழே விழுந்து மயங்கி கிடந்தார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பிரவீனா உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது, ஜோதிமணி ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. தகவல் அறிந்து வந்த குனியமுத்தூர் போலீசார் அவரது உடலை மீட்டு கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

விசாரணையில், ஜோதிமணி பாத்ரூமுக்கு சென்ற போது தரையில் வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டு இறந்திருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe