சிட்கோ அருகே வீட்டில் புகுந்து ரூ. 16 ஆயிரம் திருட்டு…

published 1 year ago

சிட்கோ அருகே வீட்டில் புகுந்து ரூ. 16 ஆயிரம் திருட்டு…

கோவை: கோவை சிட்கோ காமராஜர் நகரை சேர்ந்தவர் சுரேஷ்(46). இவர் சுந்தராபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று இவரது மனைவி கோயிலுக்கு சென்று விட்டார். வீட்டில் இருந்த அவரது மகள் கதவை திறந்து வைத்து விட்டு தூங்கினார். அப்போது அங்கு வந்த யாரோ வீட்டில் பேக்கில் வைத்திருந்த ரூ. 16 ஆயிரத்தை திருடி சென்றுவிட்டனர். 

வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய சுரேஷ் பணம் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து சுந்தராபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் திருடி சென்ற நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe