சிங்காநல்லூரில் மனைவியை பிரிந்து வாழ்ந்தவர் மர்ம சாவு

published 1 year ago

சிங்காநல்லூரில் மனைவியை பிரிந்து வாழ்ந்தவர் மர்ம சாவு

கோவை: சென்னை பட்டாபிராமை சேர்ந்தவர் விவேகானந்தன்(56). டிரைவர். இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை பிரிந்து கோவை சிங்காநல்லூர் கக்கன் நகரில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக அவரது வீட்டு கதவு திறக்கப்பட வில்லை. வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த வீட்டு உரிமையாளர் அங்கு சென்று பார்த்த போது, விவேகானந்தன் வீட்டில் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார். இது குறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் இறந்து 2 நாட்களுக்கும் மேல் இருக்கும் என்று தெரிகிறது. அவர் உடல் நலக்குறைவால் கவனிக்க ஆட்கள் இன்றி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்பது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe