கோவையில் சிஎஸ்ஐ சர்ச்சுக்குள் புகுந்து தகராறு : 3 பேர் மீது வழக்குப்பதிவு

published 1 year ago

கோவையில் சிஎஸ்ஐ சர்ச்சுக்குள் புகுந்து தகராறு : 3 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை: கோவை போத்தனூர் வெள்ளலூர் மெயின் ரோட்டில் சிஎஸ்ஐ சர்ச் உள்ளது. இங்கு பாதிரியாரை நியமிப்பது தொடர்பாக இரு தரப்புக்கு இடையே மோதல் இருந்து வருகிறது.

இது தொடர்பான வழக்கு கோவை சிவில் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று சர்ச்சுக்குள் அத்துமீறி நுழைந்த 3 பேர் தகராறில் ஈடுபட்டனர். மேலும் அங்கிருந்தவர்களை மிரட்டி கதவை உடைத்ததாக தெரிகிறது.

இது குறித்து சர்ச் தரப்பில் போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில், போலீசார் பிரின்ஸ் கால்வின், ஜெயசீலன் டேவிட் ராஜ், உதயகுமார் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe