சென்னையில் தரையில் இறங்கிய அடுக்குமாடி குடியிருப்பு.. சிக்கித்தவிக்கும் மக்கள்

published 1 year ago

சென்னையில் தரையில் இறங்கிய அடுக்குமாடி குடியிருப்பு.. சிக்கித்தவிக்கும் மக்கள்

கோவை: கனமழை காரணமாக சென்னை வேளச்சேரியில் கட்டிடம் ஒன்று தரையிறங்கிய நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மிச்சாங் புயல் காரணமாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. நேற்று மாலை தொடங்கிய கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்றிரவு முதல் பலத்த காற்று வீசி வருகிறது.

பலத்த காற்று காரணமாக மரங்கள் ஆங்காங்கே விழுந்துள்ளன. இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டிற்கு பாதுகாப்பாக இருக்கும்படி அறிவிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வேளச்சேரியில் அடிக்குமாடி கட்டம் ஒன்று தரையில் இறங்கியதாக கூறப்படுகிறது. பலர் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விபத்து ஏற்பட்ட இடத்திற்கு தீயணைப்புப்படை வீரர்கள் விரைந்துள்ளனர். இருவர் மீட்கப்பட்ட நிலையில் சிக்கியுள்ள மற்ற தொழிலாளர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe