காந்திபார்க் அருகே பைக்கில் சென்ற வாலிபர் மின்கம்பத்தில் மோதி பலி...

published 1 year ago

காந்திபார்க் அருகே பைக்கில் சென்ற வாலிபர் மின்கம்பத்தில் மோதி பலி...

கோவை: திருப்பூரை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் குமரேசன்(25). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று பைக்கில் தடாகம் ரோடு காந்திபார்க் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென பைக் நிலைதடுமாறியதில் சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதினார். 

இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe