Breaking News சென்னை, பெங்களூரில் நிலநடுக்கம்

published 1 year ago

Breaking News சென்னை, பெங்களூரில் நிலநடுக்கம்

சென்னை: சென்னையில் நிலநடுக்கம் உணரப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மிஜாங் புயல் சென்னையை புரட்டிப்போட்ட நிலையில் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகள் மெல்ல மெல்ல தனது இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.  நிவாரண பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதனிடையே செங்கல்பட்டில் இன்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது தவிர திருப்பத்தூர் வாணியம்பாடி பகுதியிலும் இந்த நிலநடுக்கம்  உணரப்பட்டுள்ளது. காலை 7.39 மணிக்கு ஈந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல். ரிக்டர் அளவுகோளில் 3.2-ஆக பதிவாகியுள்ளது.

இந்த திடீர் நிலநடுக்கத்தால் சென்னை சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது தவிர பெங்களூரில் விஜயபுரா பகுதியிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe