வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி வாலிபர் தூக்கிட்டு தற்கொலை...

published 1 year ago

வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி வாலிபர் தூக்கிட்டு தற்கொலை...

கோவை: வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோவை போத்தனூர் திருமறை நகர் முதல் தெருவை சேர்ந்தவர் அப்துல் ரஹீம்(62). சிப்ஸ் கடை வைத்துள்ளார். இவரது மகன் ரியாஷ்(24). பிகாம் (சிஏ) படித்து விட்டு வேலைக்கு முயற்சி செய்து வந்தார். ஆனால் அவருக்கு படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. இதனால் ரியாஷ் கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்தார். 

இந்நிலையில், வாழ்க்கையில் விரக்தியடைந்த ரியாஷ் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe