திருமண மண்டபத்தில் 5 பவுன் நகை திருட்டு...

published 1 year ago

திருமண மண்டபத்தில் 5 பவுன் நகை திருட்டு...

கோவை: கோவையில் திருமண மண்டபத்தில் 5 பவுன் நகை திருடு போனது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் ரகுநாதன்(67). கடந்த 8ம் தேதி திருச்சி ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ரகுநாதனின் மகளின் திருமண நிகழ்ச்சி நடந்தது. அப்போது ரகுநாதன் தான் வைத்திருந்த பேக்கை மேடை அருகே வைத்திருந்தார். அப்போது யாரோ நைசாக அதில் இருந்த 5 பவுன் நகையை திருடி சென்று விட்டனர். 

நகை திருடு போனது கண்டு அதிர்ச்சியடைந்த ரகுநாதன் இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து நகை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe