ஆன்லைனில் வேலை... இருந்த இடத்தில் இருந்தே சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி கோவையில் பட்டதாரி பெண்ணிடம் ரூ.29 லட்சம் மோசடி

published 1 year ago

ஆன்லைனில் வேலை... இருந்த இடத்தில் இருந்தே சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி கோவையில் பட்டதாரி பெண்ணிடம் ரூ.29 லட்சம் மோசடி

கோவை: கோவை காளப்பட்டி நேரு நகரை சேர்ந்தவர் வித்யா(46). எம்சிஏ படித்து முடித்துள்ளார். இவர் வீட்டில் இருந்தபடி ஆன்லைன் வேலைக்கு முயற்சி செய்து வந்தார்.

இந்நிலையில், கடந்த மாதம் டெலிகிராம் குழு மூலம் ஒரு பெண் வித்யாவை தொடர்பு கொண்டார். அப்போது அவர் ஆன்லைன் மூலம் விமான டிக்கெட் புக் செய்து கொடுத்தால் உங்களுக்கு அதிக கமிஷன் தருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் டெலிகிராம் ஐடி உருவாக்கி வேலை குறித்த வழிமுறைகளை விளக்கியுள்ளார். அவரது ஆசை வார்த்தைகளை நம்பி வித்யா அந்த நபர் கூறிய வெவ்வேறு வங்கி கணக்குகளில் ரூ. 29.30 லட்சம் அனுப்பினார்.

ஆனால் அவருக்கு கமிஷன் தொகை வரவில்லை. மீண்டும் அந்த நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த வித்யா கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இருந்த இடத்தில் இருந்து கொண்டே லட்சக்கணக்கில் சம்பாதிப்பது சாத்தியம் என்றால் எதற்காக இந்த உலகம் இப்படி ஓடி அலைந்து கொண்டிருக்கிறது என்பதை கொஞ்சம் யோசிச்சிக்கோங்க மக்களே...
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe