கணவன்- மனைவி இடையே சண்டை- தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன்...

published 1 year ago

கணவன்- மனைவி இடையே சண்டை- தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன்...

கோவை: கோவை வெள்ளலூர் இடையர்பாளையத்தை சேர்ந்தவர் மாணிக்கம்(48). தொழிலாளி. இவரது மனைவி அழகேஸ்வரி(36). குடிப்பழக்கம் உடைய மாணிக்கம் அடிக்கடி தனது மனைவியுடன் சண்டையிட்டு வந்ததாக தெரிகிறது. இதேபோல், இரு தினங்களுக்கு முன்பு மீண்டும் கணவன் - மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. 

இதனால் விரக்தியடைந்த மாணிக்கம் குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe