கோவை போலீசாருக்கு யோகா பயிற்சி

published 1 year ago

கோவை போலீசாருக்கு  யோகா பயிற்சி

கோவை: கோவை மாநகர காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு இன்று யோகா பயிற்சி வழங்கப்பட்டது.

கோவையில் போலீசாருக்கு மன அழுத்தத்தை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநகர காவல்துறை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அறிவுரையின் படி, கோவை மாநகர ஆயுதப்படை மற்றும் தாலுகா காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் காவலர்களுக்கான யோகா பயிற்சி இன்று காவலர் பயிற்சி  பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

காலை 6.30 மணிக்கு தொடங்கிய இந்த யோகா வகுப்பு 7.30 மணி வரை நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டு யோகா பயீற்சி பெற்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe