கோவையில் வீட்டில் வைத்து விபச்சாரம்...!

published 1 year ago

கோவையில் வீட்டில் வைத்து விபச்சாரம்...!

கோவை: கோவையில் வீட்டில் விபசாரம் நடத்திய பெண் புரோக்கர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை குனியமுத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விபசாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில், குனியமுத்தூர் போலீசார் நேற்று கோகுலம் காலனி சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் விபசாரம் நடத்திய புரோக்கர்கள் மதுக்கரையை சேர்ந்த சிக்கந்தர் பாஷா(30) மற்றும் கோவைப்புதூரை சேர்ந்த பிருந்தா(42) ஆகிய இருவரை கைது செய்தனர். 
பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதேபோல் சுந்தராபுரம் மாரியப்ப கோனார் தெருவில் உள்ள ஒரு வீட்டில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், சுந்தராபுரம் போலீசார் நேற்று அங்கு சென்று சோதனை நடத்தினர். அதில், அங்கு விபசாரம் நடைபெற்றது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து போலீசார் விபசார புரோக்கர் குனியமுத்தூரை சேர்ந்த முகமத் ஆசித் பரீத்(27), திருப்பூர் உடுமலைப்பேட்டையை சேர்ந்த ஆலிப் நிஷா(32) ஆகிய இருவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அங்கிருந்த ஈரோட்டை சேர்ந்த 29 வயது பெண் ஒருவரை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe