கோவையில் தென்னை மரங்களை வேருடன் பிடுங்கி வீசிய காட்டு யானைகள்

published 1 year ago

கோவையில் தென்னை மரங்களை வேருடன் பிடுங்கி வீசிய காட்டு யானைகள்

கோவை: கோவையில் தோப்புக்குள் புகுந்த காட்டு யானைகள் அங்கிருந்த தென்னை மரங்களை வேரோடு சாய்த்துவிட்டு சென்றது கிராம மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூர் பகுதியில் கதிரவன் என்பவருக்கு சொந்தமான தோப்பு உள்ளது. இந்த தோப்பிற்குள் நேற்று இரவு 7 காட்டு யானைகள் புகுந்துள்ளன.

அந்த யானைகள் தோப்பில் இருந்த தென்னை மரங்களை வேரோடு சாய்த்து சேதப்படுத்தியுள்ளன. கடந்த ஒரு வாரமாக 5 யானைகள் மற்றும் 7 யானைகள் என இரு கூட்டங்களாக வரும் காட்டு யானைகள் தென்னை மற்றும் வாழை மரங்களை சேதப்படுத்தி வருகின்றன.

காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் வனத்திற்குள் விரட்ட வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யானைகள் தென்னை மரங்களை வேரோடு பிடுங்கியெறிந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe