பீளமேடு, ஆர்.எஸ்.புரத்தில் கஞ்சா விற்பனை செய்த இளைஞர்கள் கைது!

published 1 year ago

பீளமேடு, ஆர்.எஸ்.புரத்தில் கஞ்சா விற்பனை செய்த இளைஞர்கள் கைது!

கோவை: கோவை கடைவீதி போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது ஆர்.எஸ்.புரம் பழைய பூ மார்க்கெட் ஜங்சன் அருகே சந்தேகம்படும் படி நின்றிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அதில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். சோதனை செய்த போது அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அம்மன் குளம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த தொழிலாளி பாக்கியராஜ்(20) என்பது தெரியவந்தது.

போலீசார் அவரை கைது செய்து 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதேபோல், கோவை பீளமேடு போலீசார் நேற்று ரோந்து பணி சென்றனர். அப்போது பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரி எதிரே ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நின்றிருந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கோவை தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 3ம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவர் இருகூர் தீபம் நகரை சேர்ந்த உமாசங்கர்(20) என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe