உக்கடம் மேம்பால பணிகளால் போக்குவரத்து நெரிசரில் சிக்கி கொள்ளும் ஆம்புலன்ஸ்

published 1 year ago

உக்கடம் மேம்பால பணிகளால் போக்குவரத்து நெரிசரில் சிக்கி கொள்ளும் ஆம்புலன்ஸ்

கோவை: கோவையில் பல்வேறு பகுதிகளில் மேம்பால பணிகள் நடந்து வருகின்றன. இதில் சில பாலங்கள் கட்டுமான பணிகள் முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டிருக்கின்றன. ஆனால் நீண்ட நாட்களாக கோவை உக்கடம் - ஆத்துப்பாலம் இடையே மேம்பால பணிகள் நடந்து வருகின்றன. 

இந்த பகுதியில் காலை மற்றும் மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு ஆம்புலன்ஸ் ஒன்று நோயாளியுடன் சென்றது. ஆம்புலன்ஸ் உக்கடம் - ஆத்துப்பாலம் பகுதியில் செல்லும் போது கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. வாகன நெரிசலுக்கு இடையில் ஆம்புலன்ஸ் நகர்ந்து செல்ல முடியாமல் நின்றது. சாலை ஓரம் ஒதுங்குவதற்கும் மற்ற வாகனங்களுக்கு இடம் இல்லை. 

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘அவசர காலத்தில் ஆம்புலன்சில் உயிருக்கு போராடும் நோயாளிகளை ஏற்றி செல்லும் பொழுது இது போன்று போக்குவரத்து தடை பேராபத்தை விளைவிக்கும். எனவே உக்கடம், ஆத்துப்பாலம் வழியாக செல்லும் மேம்பால பணிகளை உடனடியாக முடித்து, போக்குவரத்து நெரிசலை தடுக்க வேண்டும்.’’ என்றனர். இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் நேரத்தில் போக்குவரத்து போலீசார் அதிக அளவில் நியமிக்கப்பட்டு, போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் எனவும் கேட்டுகொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe