செல்போன் திருடிய எலக்ட்ரீசியன் கைது…

published 1 year ago

செல்போன் திருடிய எலக்ட்ரீசியன் கைது…

கோவை: மயிலாடுதுறை தரங்கம்பாடியை சேர்ந்தவர் சிவா(21). இவர் கோவையில் தங்கி கட்டிட வேலைக்கு சென்று வருகிறார். இந்நிலையில், நேற்று கெம்பட்டி காலனியில் உள்ள ஒரு கட்டிடத்தில் சிவா வேலை செய்து கொண்டிருந்தார். அவர் தனது சட்டையை கழட்டி ஆணியில் தொங்க விட்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் நைசாக சிவா சட்டையில் இருந்த செல்போனை திருடி கொண்டு தப்பி செல்ல முயன்றார். 

இதனைபார்த்து சுதாரித்த சிவா அங்கிருந்தவர்கள் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து கடைவீதி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், செல்போன் திருடியது கெம்பட்டி காலனி பாரதி நகரை சேர்ந்த மணிகண்டன்(37) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து செல்போனை மீட்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe